இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Wednesday, 27 November 2013

வாழ்வில் சந்தோஷமும் நிம்மதியும் பெற அன்னை என்ன கூறுகிறார்?




Movicon2-happy.gif
Source Wiki Commons 

நமது சிந்தனைக்கு:

உலகின் சாதாரண வாழ்வு இன்பங்களும், துன்பங்களும் நிறைந்தது. பிரச்சனைகளைச் சந்தித்தே பழக்கப்பட்ட சிலருக்கு, எந்தப் பிரச்சனையையும் எதிர் கொள்ளும் துணிவு உண்டு. மிகவும் சிரமப்பட்டாவது அதனைக் கடந்து வருவர். மனதில் துணிவில்லாதவருக்கு, சிறிய பிரச்சனையும் மலை போன்று பெரியதுதான். அப்படி பிரச்சனைகளை மனப்பக்குவதுடனோ, இல்லாமலோ கடந்து தமது வாழ்க்கையை வாழும் மனிதர்களில், எத்தனை பேர் மன நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் வாழ்கின்றனர்? பணமும், புகழும், பெறும் செல்வாக்கும் மட்டுமே நிம்மதியாக வாழ போதுமானது என்று ஒருவர் கூற முடியுமா? வாழ்வில் பெறும் எல்லா வெற்றிகளும் நமது மன நிம்மதிக்கும், சந்தோஷத்திற்கும் உறுதி அளிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. எல்லாமே கிடைத்தாலும் மனிதனுக்குள் வெறுமை எழுகிறது. எல்லாம் இருக்கிறது, நிம்மதியில்லை என்பார்கள் சிலர். இந்நிலைமை ஏன் எழுகிறது? உண்மையான சந்தோஷத்தை பெற என்ன செய்ய வேண்டும்.

அன்னை கூறுவது போல் வாழ்வில் எல்லா விஷயங்களும், நாம் படிக்கும் கற்பனைகள் நிறைந்த கதைப் புத்தகங்களில் வருவது போல் இல்லை. சிறியதும், பெரியதுமாக துன்பங்களும், சவால்களும் அடங்கியுள்ளன. மாறாத சந்தோஷத்தை நாம் பெற, நாம் ஒவ்வொரு செயலிலும் இறைவனின் கருணையை உணர்வது மட்டுமே சிறந்த வழியாகும். நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் Divine Consciousness - ஐ உணர்வது, அடையாளம் கண்டு கொள்வது மட்டுமே நம்மை மகிழ்வுடனும், நிம்மதியுடனும் வாழ வழிவகுக்கும்.


Do not attach too much importance to all these things; they are the imaginations of a child who knows nothing of life, of its misery and ugliness. For life is not as it is portrayed in novels; day-to-day existence is full of sufferings great and small, and it is only by identification with the Divine Consciousness that one can attain and preserve the true unchanging happiness.

-The Mother

மனச் சோர்வை வெல்வோம் :

உடற்பயிற்சியைப் போல மனப்பயிற்சியும் முக்கியமானது. அன்னையிடம் மனதைச் செலுத்துவது, தியானம் போன்றவை மனச்சோர்வை விலக்க உதவும். சரணாகதியும், சமர்பணமும் பிரச்சனைகளை நம்மிடமிருந்து பிரித்து அன்னையிடம் அவற்றை சரணடையச் செய்கின்றன. ஒவ்வொரு ஷணமும் அன்னை நம்முடன் இருக்கிறார் என்று உணர்வது, நம் மனதில் தெம்பையும் புத்துணர்வையும் வளர்க்கும். மனம் தெளிவடைந்தால் வாழ்வும் தெளிவாகும். அன்னை கூறுவது போல் மனச்சோர்வு, சுய இரக்கம், தாழ்வு மனப்பான்மை என எவ்விதமான உணர்வுகளுக்கும் மனதில் இடமளிக்கக் கூடாது. இது போன்ற எண்ணங்கள் நம்மை அன்னையிடம் இருந்து பிரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.அன்னை கூறுவதைப்  பார்ப்போம்.

Be careful, child, do not open the door to depression, discouragement and revolt—this leads far, far away from consciousness and makes you sink into the depths of obscurity where happiness can no longer enter.

-The Mother 

மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் வர அன்னை கூறும் மற்றொருமொரு விளக்கத்தைக் காண்போம்.


My dear mother, I don’t know why I have lost all my happiness and peace. I don’t know when it will come back to my heart. My sweet mother, what shall I do?


https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQpm_LFeAoXQlTcGOfxpeBZKYPdH_USuKaqL9ze476UIltkcJwMy dear child, When one’s attention is always turned towards oneself, one is never happy. When one allows oneself to be ruled by every passing impulse, one is never peaceful. It is through work and self-mastery that one can find happiness and peace.


Ref: Some Answers from the Mother

Friday, 22 November 2013

இறை பணி அல்லது இறைவனுக்குச் செய்யும் சேவை என்பது என்ன?


Whatever work you do, do it as perfectly as you can.

That is the best service to the Divine in man.
          - The Mother


சேவை, தொண்டு, அறப்பணி என இறைவனுக்குச் செய்யும் சேவைகள் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. உடலுழைப்பாலோ அல்லது பொருட்செலவு செய்தோ இறைவனுக்குப் பலரும் அவரவரது விருப்பம் மற்றும் வசதிக்கேற்ப சேவை செய்கின்றனர். இறைபணி செய்ய எனக்கு நேரமில்லை என்று கூறுபவரும் உண்டு. சேவை என்று கூறப்படும் செயலானது, முழுவதும் சுயநலமில்லாமல், இறைவனின் சிந்தனையுடன் செய்யப்பட வேண்டிய ஒன்று. பொய்யின் கறைகள் உள்ள எந்த பணியும், இறைவனை சென்று அடையாது, இல்லையா? அதனை, இறைவனும் ஏற்க முடியாது என்பதும் உண்மை.

அன்னை குறிப்பிடும் இறைப்பணி என்பது சுயநலம், பொய், புகழ், வீண் பெருமை என எந்தவிதமான இருளின் கறைகள் இல்லாத சேவை ஆகும். இப்படித்தான் இறை பணிகளைச் செய்ய வேண்டும் என்று அன்னை, முறைகளைப் பற்றிக் கூறவில்லை. மாறாக, நாம் சிறந்த முறையில் செய்யும் எந்தச் செயலும், மனிதனில் இருக்கும் இறைவனுக்குச் சேவையாகச் சென்றடையும் என்கிறார்.

வாழ்வில், நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், அவை சிறியதோ, பெரியதோ அவற்றை நாம் முழு ஈடுபாட்டுடன், உண்மையுடன், அவை நாம் இறைவனுக்குச செய்யும் சேவையாக மட்டுமே நினைத்து செய்யவேண்டும் என்கிறார். அதுதான் நாம் இரைவனுக்குச் செய்யக்கூடிய சிறந்த சேவை ஆகும்.


  • Whatever work you do, do it as perfectly as you can. That is the best service to the Divine in man.
  •  Whatever you do in life must be done as a service to the Divine and nobody else. Whatever you are, think or feel, you are responsible for it to the Divine and to nobody else. He is the sole Master of your being and your life. If in all sincerity you surrender entirely to Him He will take charge of you and your heart will be in peace. All the rest belongs to the world of Ignorance and is governed by ignorance which means confusion and suffering. Blessings.
- ஸ்ரீ அன்னை.

ஆகையால், இறைவனுக்கு சேவை செய்ய, தனியாக சில முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதில்லை, ஒவ்வொரு செயலும், நாம் இறைவனின் கருவியாச் செயல்பட்டு, இறைவனுக்குச் செய்யும் சேவைதான் என்றாகிறது.


நம்மில் பலருக்கும் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் Sincerity, Dedication என்பது உண்டு. மிகவும் நேர்த்தியாக ஒவ்வொரு செயலையும் செய்வார்கள். இது நமது வேலை மற்றும் கடமை, நான் எனது Boss - காக இந்த செயலை செய்கிறேன், எனது முழு திறமையுடன், உண்மையாகச் செய்வேன் என்று ஒவ்வொரு செயலையும் நேர்மையாகச் செய்யும் மனிதர்கள், பொய்யின் கறைபடாத அந்த சேவை, இறைவனை அடைகிறது என்று புரிந்து கொண்டு செய்தால், அச்செயலைப் போன்ற மகத்துவமான இறைப்பணி வேறு இல்லை, இல்லையா? நாம் எந்தச் செயலைச் செய்தாலும், நாம் உண்மையாக இருக்கவேண்டியது, அந்த இறைவனுக்கே தவிர, யாருக்கும் இல்லை.

  •  Your service to the Divine must be scrupulously honest, disinterested and unselfish, otherwise it has no value.

  • Personal feelings, grudges and misunderstandings must never interfere with the work which is done as a service to the Divine and not for human interests. Your service to the Divine must be scrupulously honest, disinterested and unselfish, otherwise it has no value.
அன்னை குறிப்பிடும் இந்த இறைபணிக்காக குறிப்பிட்ட காலம், நேரம் என்று ஒன்று இல்லை. இந்த செயலைத்தான் செய்ய வேண்டும் என்ற முறைகள் அல்லது கட்டுப்பாடுகள் இல்லை. ஆகையால், ஒளியின் பாதையை, பின்பற்றி நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவனுக்கு ஆற்றும் சேவையே.

சத்தியத்துடன் நின்று, அன்னையின் சிந்தனையுடன், ஒவ்வொரு செயலையும் செய்து, இறைப்பணி செய்வோம் எந்நாளும்! ஒம் நமோ பகவதே!

- ஸ்ரீ அன்னை.


Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine





Wednesday, 20 November 2013

Message of the Day - Sri Aurobindo

Sri aurobindo.jpgTrue knowledge is not attained by thinking. It is what you are; it is what you become; that is to say, you have the knowledge because you are That. That is the reason why I insist on the attainment of the Supermind as the condition for the experience of the highest Truth because the mind cannot really know it. In the Supermind thoughts convey different aspects of the same Truth, — so different, indeed, that the first aspect is the diametrically opposite of the last — and they are all thrown into the One.

 

- Sri Aurobindo 

 

Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo

 

Monday, 18 November 2013

கோபத்தின் விளைவுகளை நீங்கள் உணர்வீர்களா?




 நமது சிந்தனைக்கு:

நம்மில் பலருக்கும் கோபம் கொள்வது என்பது மனிதனுக்கு வேண்டிய நியாயமான உணர்வு என்ற கருத்து உண்டு. ஆனால், ஆன்மீக வாழ்வில் கோபத்திற்கு இடமில்லை. இறை விரோத சக்திகள் (hostile forces)  தம்முடைய செயலை நிறைவேற்றிக் கொள்ள, நம்மிடம் இருக்கும் தாழ்ந்த குணமாகிய கோபத்தை பயன்படுத்திக் கொள்கின்றன. அதனால், கோபத்தை நாம் வென்றால், இந்த negative forces-ன்  ஆதிக்கத்தில் இருந்து, பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

கோபம் ஒரு சாதாரண மனிதனுக்கு உள்ள கீழ்நிலை  உணர்வு. கோபத்தை வெளிப்படுத்தும் முறைகளும் மனிதரின் குணத்திற்கேற்ப வேறுபடுகின்றன. சிலர் வாய் வார்த்தைகளோடு நிறுத்திக் கொள்வார்கள். சிலர் அதற்கு ஒரு படி மேலே போய், கையில் கிடைத்ததை தூக்கி எறிவார்கள். இப்படி பல விதங்களில், கட்டுப்பாட்டை மீறி வெளிவரும் கோபத்ததால், அந்த மனிதர் மட்டுமன்றி, அவரது சூழலும், அவரைச் சுற்றி உள்ளவர்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிப்பு அடைகின்றனர். சிலர் கோபம் கொண்டால், சம்பந்தப்பட்டவர்களுடன் பேசாமல் தவிர்த்து விடுவர். மனதில் பகையை வளர்ப்பதோடு, தமது Negative Thoughts - களினால் ஒருவருடைய நலனை  மற்றவர்கள் தடை செய்கின்றனர். மனதிலும் நிம்மதியை இழக்கின்றனர். ஆகையால் பேசாமல் தவிர்ப்பதும், கோபத்தை அழிக்கவில்லை. எப்படிப் பார்த்தாலும், கோபம் என்பது பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துகிறது என்பதுதான் உண்மை.

கோபத்தை கட்டுப்படுத்துவது என்பதும் ஒரு சிறந்த முயற்சியே. ஆனால்,ஒருவர் தனது கோபத்தை அளவிற்கு மீறிய கோபத்தை எந்த வகையிலும், வெளிப்படுத்தாமல் மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டிருந்தால், அது அவரை உடலளவிலும், மனதளவிலும் பலவீனமடையச் செய்யும் என்கிறார்கள் மனவியல் நிபுணர்கள். சிலர், கோபம் வரும் சமயம், வேறு ஒரு நிகழ்வில் அல்லது செயலில் மனதை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவரவரது, மன மற்றும் அறிவு வளர்ச்சிக்கு ஏற்றபடி நாம் வாழ்வில் கோபத்தை வெளிப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ செய்கின்றோம்.

கோபம் ஏன் வருகிறது என்று சிந்தித்தால், பல்வேறு காரணங்களைக் கூறலாம். தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளையோ, மனிதர்களையோ கட்டுப்படுத்த முடியாமல் போவது, எதிர்பார்க்கும் அன்போ, அக்கறையோ  கிடைக்காமல் போவது, பொறாமை, இயலாமை, வெறுப்பு, எண்ணங்கள் அல்லது ஆசைகள் நிறைவேறாமல் போவது, தனது குறைகளை மற்றவர்கள் கூறுவது, தனது கோபம் நியாயமானது என நினைப்பது என பல காரணங்களைக் கூறிக் கொண்டே போகலாம்.

ஒன்றை மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமது கோபம், நியாயம் என்றாலும் கூட கோபம் என்பது சிறந்த மனிதனுக்கு உள்ள உணர்வு அல்ல. அன்னையின் வழி, நமக்கு நம் கோபத்தை வேறு வழியில் திருவுமாற்றம் அடைய உதவி செய்கிறது.

அன்னை கோபத்தைப் பற்றிக் கூறும் சில கருத்துக்களைக் காண்போம். கோபமும் வன்முறையின் ஒரு வெளிப்பாடே என்கிறார் அவர்.

.......... anger is a deformation of the vital power, an obscure and wholly unregenerated vital, a vital that is still subject to all the ordinary actions and reactions. When this vital power is used by an ignorant and egoistic individual will and this will meets with opposition from other individual wills around it, this power, under the pressure of opposition, changes into anger and tries to obtain by violence what cannot be achieved solely by the pressure of the force itself.

 Besides, anger, like every other kind of violence, is always a sign of weakness, impotence and incapacity.

...........because anger can only be something blind, ignorant and asuric, that is to say, contrary to the light.


Anger and vengeance belong to a lower humanity, the humanity of yesterday and not of tomorrow.

- The Mother.

நம் குழந்தைகளுக்கும், கோபத்தைத் தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வை ஊட்ட வேண்டும் என்கிறார் அன்னை. ஏனென்றால் குழந்தைகளும், கோபம் கொள்வது என்ற பழக்கத்தை பெற்றோரிடம் இருந்துதான் கற்கின்றனர்.


Two things need to be done. Children must be taught:
a) not to tell a lie, whatever the consequences;
b) to control violence, rage, anger.

- The Mother.

கோபம் என்ற தாழ்ந்த மனிதத் தன்மையை நம்மை விட்டு அகலும்படி செய்ய, ஸ்ரீ அன்னையை பிரார்த்திப்போம். நிம்மதியான வாழ்வைப் பெறுவோம்!

Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo



Wednesday, 13 November 2013

தியாகத்தின் உண்மையான அர்த்தம் என்ன? அதற்கும் சரணாகதிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

நமது சிந்தனைக்கு:

தியாகத்தைப் பற்றி இந்த உலகில் இந்த உலகில் உள்ள பொதுவான சில கருத்துக்களைக் காண்போம். இவ்வுலக வாழ்வைப் பொறுத்தவரை தியாகம் என்ற பண்பு மிகவும் உயர்ந்ததாகக் காணப்படுகிறது. தன்னை வருத்திக் கொண்டு சிலருக்கு உதவி செய்பவர் சிலர். சிலரிடம் தியாகம் செய்வது என்பது ஒரு பழக்கமாகவே ஆகிவிடுகிறது. தங்களின் சொந்த நலன்களை இழந்து கூட தியாகம் செய்ய அவர்கள் தயாராகி விடுவார்கள். இதனால் தனக்கும், தன்னை சார்ந்தவர்களுக்கும் ஏதேனும் பிரச்சனை வருமா என்று கூட அவர்கள் எண்ணுவதில்லை. மிகவுயர்ந்த செயலை, தங்களை வருத்திக்கொண்டு தாங்கள் செய்வதாக நினைக்கிறார்கள்.

தனது தியாகம் பாராட்டப்படவேண்டும் என்பதற்காகவே பலருக்கும் தெரியும்படி, தியாகத்தைச் செய்பவர் சிலர். தனக்குப் பிடிக்காத பொருளை அடுத்தவருக்காக விட்டு கொடுத்து, தியாகி என பெயர் வாங்குபவர்கள் சிலர். தியாகம் புகழைக் கொடுப்பதால், அதற்காக கூட சிலர் தியாகங்களைச் செய்கின்றனர். தனது சுயநலத்தால், தனக்கு அமைந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளையும், தியாகம் என்ற பெயராக மாற்றிக் கொள்பவர்கள் பலர். இப்படி தியாகி என்ற பெருமையைப் பெற போலித்தனமான தியாகத்தைச் செய்பவர்களும் உலகில் உள்ளனர். தனக்கு ஆகாது என்று ஜோசியர் கூறிய ஒரு பரம்பரைச் சொத்தை, தனது சகோதருக்கு விட்டுக் கொடுக்கிறார் ஒருவர். அவரது சுயநலமிக்க இந்த செயல் கூட அவருக்கு தியாகி என்ற பட்டத்தை வழங்குகிறது. அன்னை கூறும் தியாகம் என்ற செயல் இவ்வுலகில் தியாகி என்ற பட்டத்தைப் பெரும் செயல் அன்று.

ஆன்மீகச் சிந்தனையுடன் கண்டால், உங்களுடைய தியாகம், இறைவனின் எண்ணத்திற்கு எதிரானதாக கூட இருக்கலாம், எதிர்மறையான விளைவுகளைத் தருவதாக கூட இருக்கலாம். ஏனென்றால் தியாகம் என்பது ஒருவருடைய முடிவு. அது எண்ணம் சார்ந்தது. சுயநலமாகவும் இருக்கலாம்.
சரணாகதி என்பது தியாகம் அன்று. விருப்பு வெறுப்புகள் இன்றி இறைவனிடம் ஒரு செயலை ஒப்படைப்பது. நமது சுயநலமற்ற தியாகம் இந்த உலகில் நாம் உடலாலும், நம் உயர்ந்த பண்பாலும் செய்யும் சாதனையாக இருக்கலாம். ஆனால், நமது ஆன்மாவின் விருப்பங்களை நிறைவேற்றுமா, இறைவனின் திருவுள்ளத்தை அது நிறைவேற்றுமா என்பதும் ஒரு கேள்விக்குறிதான். நாம் செய்யும் சரணாகதியில், "நான் என் எண்ணங்களை, விருப்பங்களை தியாகம் செய்கிறேன்" என்ற நினைப்பிற்குக் கூட இடமில்லை. இருந்தால் அது சமர்ப்பணமில்லை.
 
  Surrender means a free total giving with all the delight of the giving; there is no sense of sacrifice in it. If you have the slightest feeling that you are making a sacrifice, then it is no longer surrender.

-The Mother

 தியாகத்தின் சில விளைவுகளை பற்றி அன்னை எழுதிய சில கருத்துகள்.

.................As a matter of fact, on one hand this knowledge is incomplete because you do not know that the only way to relieve others, to eliminate a little suffering in this world, is not to allow any sensitivity, however painful it may seem, to arouse suffering in yourself or to disturb your peace and serenity. On the other hand the idea of the work to be accomplished is itself warped by the illusion of personality. The correct idea is not to draw all suffering to yourself, which is unrealisable, but to identify yourself with all suffering, in all others, to become in it and in them a seed of light and love which will give birth to a deep understanding, to hope, trust and peace.

Until this is well understood, the taste for sacrifice rises in the being; and each time an opportunity for it appears, since you are not disinterested in this matter, since you desire this sacrifice, it becomes something sentimental and irrational and results in absurd errors which sometimes have disastrous con- sequences. Even if you are in the habit of reflecting before acting, the reflections preceding the act will necessarily be biased, since they are warped by the taste for suffering, by the desire to have an opportunity to impose a painful sacrifice on yourself.

Thus, consciously or not, instead of sacrificing yourself for the good of others, you sacrifice yourself for the pleasure of it, which is perfectly absurd and of no benefit to anyone. No action should be deemed good, no action should be undertaken until we know its immediate and, if possible, its distant consequences, and until it appears that they must in the end add, however little, to earthly happiness. But to be able to give a sound judgment on the matter, this judgment must in no way be disturbed by any personal preference, and this implies self-detachment.


Words of Long Ago by The Mother.

நாம் மற்றவர்களின் நலனுக்காச் செய்யும் சிறு செயலில் கூட, "நான்"என்ற அகங்காரம் - ego இல்லாமல், அச்செயலை இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்து செய்தால் அதுவே நாம் இறைவனின் கருவி என்பதற்கு அடையாளம். 


 Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,நமது தியாகத்தின் உண்மையான அர்த்தம் என்ன? அதற்கும் சரணாகதிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.